மனிதத் தலையைச் சுட்டு சாப்பிட்ட இளைஞர்– திடுக்கிட வைக்கும் பகீர் தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,August 17 2020]

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள ரெல்லி பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் என்பவர் தன்னுடைய வீட்டின் அருகில் ஒரு கோணிப்பை இருப்பதை கவனித்து இருக்கிறார். அந்தப் பையை திறந்து பார்த்தபோது ஒரு மனிதத் தலை இருப்பதை பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் பையை அப்படியே வைத்து விட்டு நடப்பதை கவனித்து இருக்கிறார். சிறிது நேரத்தில் அருகில் இருந்த பாழடைந்த வீட்டில் வசிக்கும் ராஜு என்ற இளைஞர் அந்தப் பையை எடுத்துச் செல்வதை ஜன்னல் வழியாக சுப்பிரமணியம் பார்த்திருக்கிறார்.

மனிதத் தலையை எடுத்துச் சென்ற ராஜு அதை அடுப்பில் வைத்து சுடுவதை சுப்பிரமணியம் தன்னுடைய வீட்டில் இருந்து கவனித்து இருக்கிறார். ராஜுவுடன் ஒரு பெண்ணும் இருந்திருக்கிறார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு ஆளான சுப்பிரமணியம் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். விரைந்து வந்த போலீஸார் ராஜுவையும் அவருடன் இருந்த பெண்ணையும் கைது செய்து இருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜுவின் தந்தை இறந்து விட்டதாகவும் பராமரிக்க ஆளில்லாததால் ராஜு கடுமையான மது போதைக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. சிறுசிறு திருட்டு விவகாரங்களில் சம்பந்தப்பட்ட ராஜு மனிதத் தலையை மயானத்தில் இருந்து எடுத்து வந்தாரா அல்லது யாரையாவது கொலை செய்து விட்டாரா என்ற கோணத்தில் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விக்கீபீடியா மாதிரி நித்தியானந்தாபீடியா… ரவுண்டு கட்டி கலக்கும் நித்யானந்தா!!!

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் வழக்கு என அடுக்கடுக்கான வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சுவாமி நித்தியானந்தா

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்??? அதிரடி தகவல்!!!

ரஷ்யாவின் கமலயோ தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் நிறுவனம் மற்றும் ராணுவ ஆய்வு மையம் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி தற்போது உலகம் முழுவதும் பெரும்

கொரோனா பீதியில் உதவிக்கு ஆளில்லை… அப்பாவின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற கொடுமை!!!

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

அரசியலில் கமல் இன்னும் எல்.கே.ஜியில் கூட சேரவில்லை: தமிழக அமைச்சர்

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை!!! அதிரடி காட்டும் புதிய திட்டம்!!!

அமெரிக்காவில் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் எளிய வழிமுறை அடுத்த வாரத்தில் இருந்து அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.