செல்போன் இல்லாததால் உயிரிழந்த கல்லூரி மாணவி! உடன்கட்டை ஏறினாரா காதலர்?

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

ஆன்லைன் படிப்புக்காக செல்போன் இல்லாததால் உளுந்தூர்பேட்டை மாணவி ஒருவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த மாணவியை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் காதலியின் மரணத்தை தாங்க முடியாத அவர் உடன்கட்டை ஏறி தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த நித்யஸ்ரீ மற்றும் அவரது இரண்டு தங்கைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருந்தது. மூவரும் ஆன்லைன் படிப்புக்காக செல்போனுக்காக ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொண்டனர். இதில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நித்யஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவரது பிணம் நேற்று எரியூட்டப்பட்டபோது, அவரை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் நித்யஸ்ரீ உடல் எரியும் தீயில் உடன்கட்டை ஏறியதாக கூறப்படுகிறது. வாலிபரின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

நித்யஸ்ரீ பிணத்துடன் இருந்த எலும்புக்கூடுகளை தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் நித்யஸ்ரீ உடலுடன் எரிந்த உடல் அந்த வாலிபரின் உடல் தானா என்பது ஆய்வில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

விஷம் குடித்த இறந்த கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்த வாலிபர் ஒருவர் உடன்கட்டை ஏறியதாக கூறப்படும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ரயில்வே ஊழியரை கட்டி வைத்து உதைத்த தமிழ் நடிகர்? காவல் நிலையத்தில் புகார்!

ரயில்வே ஊழியர் ஒருவரை தமிழ் நடிகர் ஒருவர் கட்டி வைத்து நாள் முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

விஜய் அழைப்புக்காக காத்திருக்கின்றேன்: இயக்குனர் வெற்றிமாறன்

கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன்.

தமிழகத்தில் இவ்வளவு தற்கொலையா? 4 நிமிடத்தில் ஒரு உயிர் பிரிவதாக பகீர் தகவல்!!!

இந்திய அளவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் 2 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

அகதியாக தஞ்சம் அடைந்தவருக்கு ஹெலிகாப்டரில் பிரசவம்!!! பரபரப்பு தகவல்!!!

இத்தாலிக்கு அகதியாக வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பல்லாயிரக் கணக்கான அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

கொரோனா காலத்திலும் இந்திய அளவில் வேலை வாய்ப்பின்மையைக் குறைத்து அதிரடி காட்டும் தமிழக அரசு!!!

கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து