காய்கறி வாங்க சென்ற இளைஞர் மனைவியுடன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அம்மா!

காய்கறி வாங்கி விட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு மார்க்கெட் சென்ற இளைஞர் திரும்பி வரும்போது மனைவியுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சமீபத்தில் காய்கறி வாங்குவதற்காக தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு கடைக்கு சென்றார். அப்போது அவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது ஒரு பெண்ணுடன் வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் இந்தப் பெண் யார் என்று கேட்டபோது அவள் என் மனைவி என்றும் எங்களுக்கு திருமணமாகி விட்டதால் நாங்கள் இப்போது புதுமண தம்பதி என்றும் கூறியதால் அவரது அம்மா அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து ஆத்திரம் தாங்க முடியாமல் அந்த இளைஞரின் அம்மா, காவல்துறையில் புகார் அளித்தார். கடைக்கு போய்விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்ற எனது மகன் மனைவியுடன் வந்திருப்பதாக புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் அந்த இளைஞனிடம் விசாரித்தபோது காய்கறி வாங்கச் சென்ற இடத்தில் இந்த பெண்ணை பார்த்தவுடன் பிடித்து விட்டதாகவும் உடனே திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு ஒரு புரோகிதர் திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார். போலீசாரும் இந்த பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் காய்கறி வாங்கச் சென்ற இளைஞர் ஒருவர் கல்யாணம் செய்து மனைவியுடன் திரும்பி வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'வலிமை' படம் குறித்த முக்கிய அறிவிப்பு: அஜித் ரசிகர்கள் அப்செட்

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால்

பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மறைவு: ரஜினி, கமல் இரங்கல்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்

கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்தின் வெற்றியால் அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம்!!! நடப்பது என்ன???

Remdesivir மருந்தின் சோதனை முடிவுகளால் தற்போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்பிக்கை பெற்று உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் எவை எவை? மண்டலவாரி பட்டியல்

தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது

கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாகப் பணியாற்றும் உலக நாடுகளின் பெண் தலைவர்கள்!!!

உலக நாடுகளில் பெண் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகத் தற்போது செய்திகள் வலம் வருகின்றன.