சென்னை பெண் தொழிலதிபரின் ஆபாச படத்தை வைத்து மிரட்டிய வாலிபர்: வளைத்து பிடித்த கணவர்!

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

சென்னை பெண் தொழிலதிபர் ஒருவரின் ஆபாச படத்தை வைத்துக்கொண்டு மிரட்டியதோடு அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய வாலிபர் ஒருவரை பெண் தொழிலதிபரின் கணவர் வளைத்துப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவருடன் ரத்தினகுமார் என்ற வாலிபர் போன் மூலம் பழகி உள்ளார். அவரது இனிமையான பேச்சுக்கு மயங்கிய பெண் தொழிலதிபர் அவரிடம் தன்னுடைய அந்தரங்க விஷயங்களை கூறியுள்ளார், அதில் திருமணத்துக்கு முன்பே தனக்கு வேறொருவரிடம் காதல் இருந்தது குறித்தும் தெரிவித்துள்ளார்

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரத்தினகுமார் அந்த பெண் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளார். பணம் கொடுக்காவிட்டால் அவரது கணவரிடம் அவருடைய முந்தைய காதலை கூறி விடுவேன் என்று மிரட்டி உள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி ஆபாச நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறும் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய ரத்தினகுமார், லட்சக்கணக்கில் பணம் கேட்டு தொல்லை செய்ததாகவும் தெரிகிறது

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் ரத்தினகுமாரின் அடுக்கடுக்கான டார்ச்சர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் தொழில் அதிபர் தனது கணவரிடம் நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களுடன் திட்டமிட்ட அவரது கணவர், ரத்தினகுமாரை ஆதாரத்துடன் வளைத்துப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் ரத்தினகுமார் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் பெண் தொழில் அதிபரிடம் மட்டுமின்றி பல பெண்களை ரத்தினகுமார் ஏமாற்றி உள்ளார் என்றும் ஒரு சில பெண்களிடம் பெண் வேடமிட்டு ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து ரத்தினகுமாரிடம் மேலும் பல பெண்கள் ஏமாந்து இருக்கலாம் என்ற ரீதியில் தற்போது விசாரணை நடந்து வருகிறது

More News

முதல் நாளே தலைகுப்புற கீழே விழுந்த அறந்தாங்கி நிஷா: என்ன ஆச்சு?

ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர நிகழ்ச்சியை விட அந்த நிகழ்ச்சியின் 10 வினாடி புரோமோ விடியோ பெரும் எதிர்ப்பார்ப்பையும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.

தொடர்நது குண்டு மழை பொழியும் அர்மீனியா- அஜர்பைஜான் மோதல், மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா???

கொரோனா தாக்கத்தால் உலகமே கதிகலங்கி இருக்கும் நேரத்தில் முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியாவும் அஜர்பைஜானும் தங்களுக்குள் கடுமையான தாக்குதலை நடத்திக் கொள்கின்றன.

ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு; கிடுக்குப்பிடிக் காட்டும் சிபிஐ, அமலாக்கத்துறை!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை மீதான மேல்முறையீட்டு வழக்குகள் இன்றுமுதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி… முன்னுரிமை யாருக்கு???

இந்தியாவில் கோவேக்சின், ஜைகோவ்டி என இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன

முதல் நாளே ஆரம்பித்த பிரச்சனை: ஷிவானியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில்