தூக்கில் தொங்கிய பிரபல டிவி சீரியல் நடிகை

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

கடந்த சில மாதங்களாகவே தொலைக்காட்சி நடிகர், நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் இன்று ஒரு பிரபல டிவி சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இந்தி, வங்காளம் உள்பட பல மொழி டிவி தொடர்களில் நடித்து வருபவர் மெளமிதா சஹா. இவர் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

மெளமிதா சஹா தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்த பக்கத்து வீட்டினர் உடனடியாக கொல்கத்தா போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து மெளமிதா சஹாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மெளமிதா சஹாவின் படுக்கை அறையில் ஒரு கடிதமும் செல்போனும் இருந்ததாகவும், அதை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த கடிதத்திலும் செல்போனிலும் அவரது தற்கொலைக்கான காரணம் இருக்கும் என்று கூறப்படுகிறது

More News

தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய போராட்டம் குறித்து அதிரடி அறிக்கை

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகை ரிதுவர்மா

தெலுங்கு நடிகை ரிதுவர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது நண்பர்களும் தமிழ், தெலுங்கு திரையுலகினர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை

போன வருடம் பரதம், இந்த வருடம் பாட்டு: ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ் பல்திறமை கொண்டவர் என்பது தெரிந்ததே. குடும்பம், குழந்தைகளை கவனித்து கொண்டே அவர் திரைப்படம் இயக்குவது உள்பட பல்வேறு கலைப்பணிகளை செய்து வருகிறார்.

நயன்தாராவுடன் டான்ஸ் ஆடிய நடிகரை பார்த்து ஆத்திரமடைந்த விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தி நடித்திருந்த ராகுல் தாத்தா நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார் என்பது தெரிந்ததே.

ஜோதிகாவை புகழ்ந்த காமெடி நடிகருக்கு நன்றி கூறிய சூர்யா

நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த நிலையில் '36 வயதினிலே' படத்தின் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்