முதலிரவிலேயே சந்தேகம் அடைந்த கணவர்: அதிர்ச்சியில் தீக்குளித்த மணப்பெண்

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

முதலிரவிலேயே சந்தேகமடைந்த கணவனால் அதிர்ச்சி அடைந்த புதுமணப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அரியூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திரலேகா. இவருக்கும் பாலாஜி என்பவருக்கும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தன்று முதலிரவு அறைக்கு ஏகப்பட்ட கனவுகளுடன் சென்ற சந்திரலேகா, கணவர் பாலாஜி அடுத்தடுத்து கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதுவரை யாரையாவது காதலித்தாயா? உன்னை யாராவது காதலித்தார்களா? என்னை விட்டுவிட்டு காதலித்த பையனுடன் ஓடிவிடுவாயா? என்று அடுத்தடுத்து சந்தேகப்படும்படியான கேள்வியை கேட்டுள்ளார்.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த புதுமணப்பெண் முதலிரவிலேயே சந்தேகப்படும் கணவனுடன் தன்னால் இனி வாழ முடியாது என்றும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு குளியலறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த கடிதத்தில் தங்கைகளுக்காவது நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று சந்திரலேகா கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கடிதத்தைப் பார்த்த சந்திரலேகாவின் பெற்றோர்கள் அதனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். முதலிரவு அன்றே சந்தேகம் அடைந்த கணவரால், புதுமணப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

ஆன்லைன் வகுப்பால் அடுத்தடுத்து பலியான இரண்டு உயிர்கள்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு காரணமாக அடுத்தடுத்து ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஒரே குடும்பத்தில் 32 பேருக்குக் கொரோனா!!! பரபரப்பு தகவல்!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 32 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதிச்செய்யப் பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஓடிடியில் ரிலீஸாகும் 'மாஸ்டர்' நடிகரின் அடுத்த படம்: பரபரப்பு தகவல் 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் அட்டகாசமான வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்'

விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில்: நாயகி, இயக்குனர் குறித்த தகவல் 

கோலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான விஜய்ஆண்டனி, 'நான்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகி, அதன் பின்னர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சென்னையில் முதல் நாளிலேயே மால் விசிட் அடித்த தமிழ் நடிகை

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னையில் மால்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் அனுமதியின் பேரில் நேற்று முதல் மால்கள் திறக்கப்பட்டன.