3வது படத்திலேயே உச்சத்தை தொடும் இயக்குனர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2019]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்குனர் பத்து அல்லது பதினைந்து படங்கள் இயக்கிய பின்னரே பெரிய நடிகர்கள் பக்கமே அவர்கள் நெருங்க முடியும். ஆனால் இன்றைய இளையதலைமுறை இயக்குனர்கள் ஒன்று அல்லது இரண்டு ஹிட் கொடுத்துவிட்டால் மூன்றாவது படத்திலேயே உச்ச நடிகர்களை தொட்டு விடுகின்றனர்.

'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் மூன்றாவது படமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தையும் 4வது படமாக 'காலா' படத்தையும் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதேபோல் 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத், மூன்றாவது படமாக அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது 'மாநகரம்' மற்றும் 'கைதி' படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் மூன்றாவது படமாக விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 64' படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்றைய இளம் இயக்குனர்கள் தங்கள் திறமையை ஒருமுறை அல்லது இருமுறை நிரூபித்தால் அவர்கள் உச்ச நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பை பெற அதிக வாய்ப்புள்ளது என்பதையே இந்த முன்னுதாரணங்கள் காண்பிக்கின்றன

More News

'நாக்கை அறுக்க வேண்டும்' என்று பேசிய அமைச்சர் குறித்து மக்கள் நீதிமன்றம் அறிக்கை!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் நாதுராம் கோட்சே என்று சமீபத்தில் கமல் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'தளபதி 63' படத்தின் 'வெறி'த்தனமான டைட்டில் குறித்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கமல் வீட்டின் முன் குவிந்த போலீஸ்: ஆழ்வார்ப்பேட்டையில் பரபரப்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதி குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஒருபுறம் கண்டனங்களும் இன்னொரு புறம் ஆதரவும் குவிந்து வருகிறது.

கேவலமாக கலாய்த்தவர்களுக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த 'பேட்ட' நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக 'பூங்கொடி' என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா மேனன்.

கமலின் இந்து தீவிரவாத பேச்சுக்கு ரஜினி கூறிய பதில்!

தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய கமல், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் காந்தியை சுட்டு கொலை செய்த நாதுராம் கோட்சே என்றும் பேசினார்.