என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள்: இயக்குனர் குறித்து ஸ்ரீரெட்டி

  • IndiaGlitz, [Thursday,July 26 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி திரையுலக பிரபலங்கள் பலர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார். முதலில் இவர் மீது பரிதாபப்பட்ட ஒருசிலர் கூட தற்போது இவர் விளம்பரத்திற்காக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும், அப்படியே அவர் கூறியதில் உண்மை இருந்தாலும் இவருடைய விருப்பத்தின்பேரில்தான் தானே அது நடந்துள்ளது என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் வாராகி என்பவர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். இந்த புகார் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உண்ணுவதற்கு உணவு கூட கொடுக்காமல் என்னை வெளியே அனுப்பிவிட்டனர். நான். யாரிடம் இருந்தும் ஒரு நயாபைசா கூட வாங்கவில்லை. என்னை அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருக்க வேண்டும். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண்ணான எனக்கு எனக்கு மரியாதை கொடுப்பதற்கு பதில், என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று பதிவு செய்துள்ளார்.

More News

த்ரிஷா படத்தை ரீமேக் செய்ய விரும்பும் மாதவன்

த்ரிஷா நடிப்பில் இயக்குனர் மாதேஷ் இயக்கிய 'மோகினி' திரைப்படம் நாளை முதல் வெள்ளித்திரையில் திரையிடப்படவுள்ளது.

ஐபிஎல் ஸ்டாருடன் இணைந்த நடிகை அமலாபால்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்டார் வர்ணனையாளராக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சமீர் கோச்சார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சமந்தாவுக்கு கிடைத்த 'சுதந்திரதேவி' கேரக்டர்

திருமணத்திற்கு பின்னரும் பிசியாக இருந்து வரும் சமந்தா, சிவகார்த்திகேயனுடன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.

அரசியல் குறித்து கருத்து சொல்ல தகுதியற்றவர் கமல்ஹாசன்: ஹெச்.ராஜா

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தலைவர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.