'தல தரிசனம் கிடைத்தது, அது போதும்.. சிஎஸ்கே மேட்ச் பார்த்த யோகிபாபு பேட்டி..!

  • IndiaGlitz, [Monday,May 15 2023]

தல தரிசனம் கிடைத்தது அது போதும் என சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை பார்த்த நடிகர் யோகி பாபு பேட்டி அளித்துள்ளார்.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது என்பதும், இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் வித்தியாச தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் சென்னை ரசிகர்கள் இந்த போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர் என்பதும் குறிப்பாக தல தோனி கடைசி இரண்டு பந்துகளை சந்திக்க களம் இறங்கிய போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டியை பார்க்க வந்த நடிகர் யோகி பாபு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய போது ’முதல் முறையாக நான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கிறேன். பலமுறை போட்டியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்த போதும் என்னால் வர முடியவில்லை. இங்கே அரங்கில் உட்கார்ந்து ரசிகர்களோடு கூட்டத்தோடு போட்டியை பார்த்த போது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. குறிப்பாக தல கடைசி இரண்டு பால் ஆடினார், அது போதும் தல தரிசனம் கிடைத்துவிட்டது’ என்று கூறினார்.

மேலும் போட்டி முடிந்ததும் நடிகர் யோகிபாபு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

உலகின் மிகச்சிறந்த அன்னை: அன்னையர் தினத்தில் மகன்களுடன் நயன்தாரா.. !

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் அன்னையருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள்

ஒரு நாளைக்குக் 100 கால் வருது, பதில் சொல்ல வேண்டியது என் வேலையல்ல.. திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்த நடிகை..!

பேட்டி கொடுக்க சொல்லி எனக்கு ஒரு நாளைக்கு 100 கால்களுக்கு மேல் வருகிறது என்றும் நான் என்னுடைய நிலைமையை யாரிடம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தயவுசெய்து என்னிடம் பேட்டி கேட்டு

எம்.ஆர்.ராதா மனைவியின் இளமைக்கால புகைப்படங்கள்.. அன்னையர் தினத்தில் வெளியிட்ட நடிகை..!

பழம்பெரும் நடிகர் நடிகவேள் எம்ஆர் ராதாவின் மனைவி இளமைக் காலத்தில் இருந்த புகைப்படங்களை அவரது மகளும் நடிகையுமான நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த

ஓடிடியில் 'பொன்னியின் செல்வன் 2' எப்போது? 

'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக

தென்னிந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.. கர்நாடகா தேர்தல் குறித்து 'லியோ' பிரபலம்..!

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து தென்னிந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என 'லியோ' படத்தின் பிரபலம் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில்