தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு!

  • IndiaGlitz, [Friday,August 14 2020]

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தற்போது முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பல படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடிக்கும் நடிகராக இருந்தார். இந்த நிலையில் யோகி பாபு நடித்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பழைய திரைப்படங்கள் தற்போது மீண்டும் தூசி தட்டப்பட்டு யோகி பாபு ஹீரோவாக நடித்தது போன்ற விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஏமாற்றமடைந்து நஷ்டம் அடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் கூட தெளலத்’ என்ற திரைப்படத்தில் யோகிபாபு ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்தது போன்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் யோகி பாபு இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் சில வருடங்களுக்கு முன் ஒரு சில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்த படங்கள் தற்போது ரிலீசாகின்றன. அந்த படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பேன். ஆனால் தற்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நான் தான் ஹீரோவாக நடித்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தயவுசெய்து இதுமாதிரி தவறுகளை செய்யாதீர்கள். விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைகின்றனர். இது மாதிரி சில படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றியது குறித்து பலர் எனக்கு போன் செய்து பேசி உங்களை நம்பித்தான் படத்திற்கு போனோம் ஆனால் ஏமாற்றம் அடைந்தோம் என்று கூறி உள்ளனர். இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது

தற்போது கூட ‘தெளலத்’ என்ற படத்தில் நான் ஹீரோவாக நடித்து இருப்பது போன்று போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் சிவன் தான் ஹீரோ. நான் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் நடித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய சோலோ போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். தயவுசெய்து இது மாதிரி செய்ய வேண்டாம். என்னை உண்மையாகவே ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இதனால் வருத்தம் அடைகிறார்கள். எனவே தயவுசெய்து இதுபோன்ற தவறை யாரும் செய்ய வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்’ என்று யோகி பாபு அந்த வீடியோவில் கூறியுள்ளார்
 

More News

இபாஸ் நடைமுறையில் புதிய தளர்வு: அதிரடி அறிவிப்பு விடுத்த முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவசர காரியமாக செல்ல வேண்டுமென்றால்

தற்கொலை செய்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய விஜய்!

இன்று காலை முதல் டுவிட்டரில் பாலா என்ற விஜய் ரசிகர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட தகவல் மிக வேகமாக பரவி டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே.

கொரோனா காலத்திலும் விவசாயிகளின் நலன் காக்கும் தமிழக அரசு!!! அதிரடித் திட்டங்களால் அசத்தும் தமிழக முதல்வர்!!!

இந்திய அளவில் கொரோனாவை சிறப்பாக கையாளும் மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.

மலேசியாவின் 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பிய நபர்… 3 மாதம் சிறை மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

தமிழகத்தின் சிவகங்கையில் இருந்து மலேசியாவிற்கு சென்ற நபர் அங்குள்ள 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பியதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது

கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்த கூலிப்படையை ஏவிய மனைவி: அதிர்ச்சி தகவல் 

நாகர்கோவில் அருகே கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தி கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது