பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும் நடித்து வரும் யோகி பாபு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஒரு சில படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியின் ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம் கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தையும் தினேஷ் நடித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு

மணி ஹெய்ஸ்ட் தமிழ் நடிகர்கள் வீடியோ இதோ:

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்' சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 700க்கும் அதிகமாகவும், சென்னையில் 500க்கும் அதிகமாகவும் இருந்த நிலையில்

தமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்!

தமிழக-கேரள எல்லையில் ஒரு திருமணம் நடந்ததாகவும் அந்த திருமணம் முடிந்த பின்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் அவரவர் வீட்டிற்கு சென்றதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

நித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா??? மொலோசியா குடியரசு பிறந்த கதை!!!

பண்டைய கிரேக்க வரலாற்றில் மொலோசியா என்ற நகரம் மிகவும் பிரபலமானது