நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து: சென்னையில் பரபரப்பு

சென்னையில் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக வெளி வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

‘இருட்டுஅறையில்முரட்டுக்குத்து’ என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை யாஷிகா, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட இறுதிப்போட்டி வரை நெருங்கினார்.

இந்த நிலையில் நேற்று இரவு நடிகை யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் நுங்கம்பாக்கம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து அந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளதான செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த விபத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் பரத் என்பவர் படுகாயமடைந்து அவர் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இந்த காரில் இருந்தவர்கள் மது அருந்தியுள்ளதாகவும், இந்த காரில் வந்த யாஷிகா, விபத்து ஏற்பட்டதும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் காரில் யாஷிகா சென்றதாகவோ, அவர் மது அருந்தியிருந்ததாகவோ பரவி வரும் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

பாஜகவில் திடீரென இணைந்த பிரபல நடிகர்-தயாரிப்பாளர்

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் அரசியலில் களம் புகுந்து பல்வேறு கட்சிகளில் இணைந்து வருவதும், ஒருசிலர் சொந்தமாகவே கட்சி ஆரம்பித்து வருவதும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஆகும்

உங்களுக்காகத்தான் எல்லாமே! விஜய் ரசிகர்களுக்கு விவேக் ஆறுதல்

'பிகில்' படத்தின் டீசர் வெளியீடு இந்த வாரம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், அடுத்த வாரம் திங்களன்று 'பிகில்' டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்

கார்த்தியின் 'கைதி' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் 'பிகில்', கார்த்தியின் 'கைதி' மற்றும் விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' என மூன்று மாஸ் திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால் தீபாவளி விருந்து சினிமா

ஃபைனலுக்கு முன் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முகின், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகின் ஆகிய நால்வர் இருந்தாலும் இன்று ஒருவர் வெளியேற்றப்பட்டு நாளை மூவர் ஃபைனலுக்கு செல்லவுள்ளனர்.

சிரஞ்சீவியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை!

சிரஞ்சீவி நடித்த 151வது திரைப்படமான 'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படம் தெலுங்கானா