'வாழை' திருடப்பட்ட கதையா? எழுத்தாளரின் குற்றச்சாட்டும் மாரி செல்வராஜின் பதிலும்..!.

  • IndiaGlitz, [Thursday,August 29 2024]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சோ தர்மன் என்பவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.

எழுத்தாளர் சோ தர்மன் தனது முகநூலில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன்.

என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடையவாழையடி......என்கிற சிறுகதை.

என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்யூனிஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது.ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என் கதை இலக்கியமாகவே நின்று விட்டது.இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் .ஒரு படைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.இச்சிறுகதை என்னுடைய நீர்ப்பழிஎன்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும். என்னை வாழை வாழ வைக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

சோ தர்மனின் இந்த பதிவுக்கு மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி

More News

6000 புத்தகங்கள்..... ஜானகி அம்மாள் வியந்த எம்.ஜி. ஆர் புகைப்படம்

ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் அறிமுகமானவர்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை.. ஊர்வசி சொன்ன ஐடியா..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடக்காமல் இருக்க இதை செய்ய வேண்டும் என நடிகை ஊர்வசி ஐடியா கொடுத்துள்ளார்.

இந்த முறை ஆண் குழந்தை தான்.. கர்ப்பிணி நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து.. க்யூட் புகைப்படங்கள்..!

கர்ப்பிணியாக இருக்கும் நடிகை இடம் இந்த முறை உங்களுக்கு ஆண் குழந்தை தான் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'தங்கலான்' நடிகர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து.. என்ன நடந்தது?

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர்

NO என்றால் NO தான்: நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து குஷ்பு..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகை மற்றும் பாஜக பிரபலம் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவை செய்துள்ளார்.