சிம்பு - கெளதம் மேனன் படத்தில் இணையும் '2.0' பிரபலம்!

சிம்பு நடிப்பில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் ’நதிகளிலே நீராடும் சூரியன்’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பதும் அவர் தனது பாடல் கம்போசிங் பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்கு வசனம் எழுத இருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஜெயமோகன் வசனமும் இணைந்தால் படம் லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்களை தாமரை எழுதயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

சிம்பு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

தனுஷின் 'நானே வருவேன்' டைட்டில் மாற்றப்படுகிறதா?

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'நானே வருவேன்' என்ற திரைப்படத்தின் டைட்டில் திடீரென மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மஞ்சிமா மோகனுக்கு இப்படிப்பட்ட நபர் தான் தேவையாம்!

கௌதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன்பின் 'சத்ரியன்' 'இப்படை வெல்லும்'

இந்த பையனை மட்டும் திருமணம் செய்ய மாட்டேன்: திருமணம் குறித்து டாப்ஸி

பிரபல நடிகை டாப்ஸி தனது திருமணம் குறித்து மனம்திறந்த கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது 

'குக் வித் கோமாளி' அஸ்வின் படத்தின் இரண்டு ஹீரோயின்கள் யார் யார்?

'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலில் பிரபலமான அஸ்வின். என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்றும்

'வலிமை' படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு?

அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பு நடைபெற்ற அதே இடத்தில் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன