யுகேஜி படிக்கும்போதே உலக சாதனை படைத்த தமிழக சிறுவன்!

  • IndiaGlitz, [Saturday,June 11 2022]

யுகேஜி படிக்கும்போதே உலக சாதனை படைத்திருக்கிறார் நாமக்கல் மாவட்டத்தில் வசித்துவரும் சிறுவன் கே.எம்.தட்ஷன். இவர் தன்னுடைய அறிவுத்திறனுக்காக உலக அளவில் சாதனை படைத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சண்முகபுரம் பகுதியில் வசித்துவரும் குமார சரவணன் மற்றும் மனோண்மணி தம்பதிகளின் ஒரே மகனான கே.எம்.தட்ஷன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கும் தலா 10 வார்த்தைகள் வீதம் மொத்தம் 260 வார்த்தைகள் மற்றும் தமிழில் உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்தில் துவங்கும் 173 வார்த்தைகள் கூடவே பறவைகள், விலங்குகள், பழங்கள், வாகனங்கள் என மொத்தம் 800 வார்த்தைகளுக்கு மேல் தனது நினைவில் வைத்திருக்கிறார்.

இதுகுறித்த படங்களைக் காட்டும்போது சிறுவன் தட்ஷன் அசராமல் அதற்கான வார்த்தைகளைக் கூறி பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இவரது தனித்திறமையை அங்கீகரித்து யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ் எனும் புத்தகத்திலும் பியூட்சர் கலாம் புக் ஆப் ரிகார்ட் புத்தகத்திலும் சிறுவன் தட்ஷனின் பெயர் தற்போது இடம்பிடித்திருக்கிறது.

மேலும் உலகச் சாதனை படைத்த தட்ஷனுக்கு விண்வெளி ஆராய்ச்சி துறையில் இப்போதே ஆர்வம் இருப்பதாக அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். யுகேஜி படிக்கும்போதே உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய தட்ஷனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

More News

செலவில்லாமல் திருமணம் செய்த நயன்தாராவுக்கு இத்தனை கோடி வருமானமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவாகி இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் அவரது திருமணத்திற்கு ஒரு ரூபாய் கூட

ஒரே ஒரு காட்சியில் நடித்து பிரபலமான மதுரை பொண்ணு: தொடர்கிறது 'விக்ரம்' மேஜிக்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது

சூர்யா-கார்த்தி பட நடிகைக்கு பெண் குழந்தை: வைரல் புகைப்படங்கள்!

சூர்யா, கார்த்தி படங்களில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம்

போலீஸில் புகார் அளித்த தனுஷ்-சிம்பு பட நாயகி: ஏன் தெரியுமா?

தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்து தெரிவித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம்பு, தனுஷ் பட நடிகை போலிஸில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மார்பகத்தை பெரிதாக்க ஊசி: பகீர் தகவலை வெளியிட்ட 'கபாலி' நாயகி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'கபாலி' படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்தே, தனது மார்பகத்தை பெரிதாக்க ஊசி போட சொல்லி பலர் வலியுறுத்தியதாக