இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை வெளியீடு..!

இந்த ஆண்டு இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை சற்றுமுன் வெளியாகியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து அக்டோபர் 11ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும், அக்டோபர் 15ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன், அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேச அணியுடனும், அக்டோபர் 22ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன், இந்தியா மோத உள்ளது. இதனை அடுத்து அக்டோபர் 21ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன், நவம்பர் 5ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியுடன், இந்தியா மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டி மும்பையில் நவம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதி போட்டி அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அம்மாவுக்கு பெருமை தேடி கொடுத்த நடிகை மாதவியின் மகள்.. என்ன செஞ்சிருக்கார் பாருங்க..!

தமிழ் திரையுலகில் கடந்த 80 களில் கனவு கன்னியாக இருந்த நடிகை மாதவியின் மகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் அவருக்கு உலகின் இரண்டு சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து மேல் படிப்பு படிக்க அழைப்பு

ஆருத்ரா கோல்டு மோசடி.. தமிழ் ஹீரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழ் ஹீரோ ஒருவர் 15 கோடி ரூபாய் பணம் பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூர்யா சொன்னது அப்ப புரியல, இப்ப தான் புரியுது: உதயநிதி ஸ்டாலின்..!

சூர்யா சொன்னது அப்போது புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடந்த சினிமா விழா ஒன்றில் பேசியுள்ளார்

ஊட்டிக்கு பைக் டிராவல் சென்ற இளம் நடிகர்… கோர விபத்தில் சிக்கி வலது காலை இழந்த சோகம்!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருந்து மறைந்த நடிகர் ராஜ்குமாரின் நெருங்கிய உறவினரும் தற்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருபவருமான இளம் நடிகர் சூரஜ்குமார்

உண்மையான டைட்டானிக் பேரழிவு மாதிரியே இருக்கு… சோகத்தை பதிவிட்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்!

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உதிரிபாகங்களை பார்வையிடுவதற்காக சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து காணாமல்போன 5 பேர் குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்