குடும்பமே மரணம் அடைய காரணமான டிரைவரை மன்னித்த கருணையுள்ள பெண்!

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

தென்மேற்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்த 43 வயது பெண் ஒருவரின் கணவர், மகள் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஆகிய மூன்று உயிர்கள் மரணம் அடைய காரணமாக இருந்த டிரைவர் ஒருவரை மன்னித்ததோடு, அவர் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

எல்பர் டுவோமி என்ற 43 வயது பெண் தனது கணவர் கான், ஒன்றரை வயது குழந்தை ஓசின் மற்றும் வயிற்றில் ஐந்து மாத கருவோடு 10 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

ஆறு நாட்கள் இன்பச்சுற்றுலா முடிந்து ஏழாவது நாள் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று தவறான பாதையில் வந்து எல்பர் குடும்பத்தினர் சென்ற காரின்மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கணவர் கான், குழந்தை ஓசின் ஆகியோர்களை பறிகொடுத்த எல்பர், தனது வயிற்றில் இருந்த ஐந்து மாத கருவும் கலைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த டிரைவரை தான் மன்னித்துவிட்டதாகவும், அவருடைய நலத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எல்பர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

More News

உலகின் 50 செக்ஸி நகரங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நகரம்!

தனியார் நிறுவனம் ஒன்று உலகில் உள்ள 50 செக்ஸியான நகரங்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்து அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர் 

திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தில் இரண்டு வயது குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள் 

பிரிட்டன் நாட்டில் ஒரு தம்பதியர் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது 2 வயது குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்ததை கவனிக்காமல்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரபல நடிகர் சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது 'மாயோன்', 'வால்டர்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

இதற்கெல்லாம் விஜய் பயப்படக்கூடாது: பிகில் விவகாரம் குறித்து சீமான்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் இன்று இரவு வெளிநாடுகளிலும் நாளை காலை இந்தியாவிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில்

அதிகாலை சிறப்புக்காட்சி குறித்து அமைச்சரின் அதிரடி டுவீட்

விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட