ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்: குடும்பத்துடன் கணவர் தலைமறைவு

  • IndiaGlitz, [Tuesday,June 11 2019]

ஓடும் காரில் இருந்து ஒரு பெண்ணை அவரது கணவரும் கணவரின் குடும்பத்தார்களும் தள்ளிவிடப்பட்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கோவையைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்க்ளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இருதரப்பின் பெரியோர்கள் மீண்டும் இருவரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அண்மையில் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.

இந்த நிலையில் அமல்ராஜ் தனது மனைவி ஆர்த்தி மற்றும் பெற்றோருடன் காரில் சென்று கொண்டிருந்த போது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதை அடுத்து அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர்கள் ஆர்த்தியை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். காரில் இருந்து ஆர்த்தி கீழே விழுந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னை தனது கணவரும் அவருடைய பெற்றோரும் தான் காரில் இருந்து கீழே தள்ளியதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்த்தி, போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமல்ராஜ் மற்றும் அவருடைய பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
 

More News

இயக்குனர்களை அவமதிக்க வேண்டாம்: வடிவேலுக்கு சமுத்திரக்கனி கண்டனம்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தின் பிரச்சனை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வடிவேலு,

'கொலையுதிர்க்காலம்' தயாரிப்பாளருக்கு விக்னேஷ்சிவன் அனுப்பிய தகவல்!

நடிகை நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் புரமோஷன் விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றபோது அந்த விழாவில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால்

விஜய்சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, 'கனா' நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே ரம்மி, 'பண்ணையாரும் பத்மினியும், 'இடம் பொருள் ஏவல்' மற்றும்  'தர்மதுரை' ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக

கிரிஷ் கர்னாட்- கிரேசி மோகன் இணைந்து பணிபுரிந்த ஒரே படம்!

இன்று ஒரே நாளில் இரண்டு திரையுலக பிரபலங்கள் மரணம் அடைந்தது திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. தமிழ் உள்பட இந்தியாவின் முன்னணி மொழிகளில் குணசித்திர

இந்திய அணியின் வெற்றியை அரைநிர்வாண போஸ் கொடுத்து கொண்டாடிய நடிகை

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.