ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் போலீஸ் பிடிபட்டாரா? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

சென்னை மெரீனாவில் நடைபெற்ற மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி தினத்தன்று மாணவர்களை போலிசார் கலைக்க முயன்றனர். அப்போது போலிசாருக்கும் சமூக விரோதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் சமூக விரோதிகள் ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினர்.

சமூக விரோதிகள் மட்டுமின்றி போலீசாரும் ஒருசில இடங்களில் தீ வைத்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. குறிப்பாக சாலையில் நின்றிருந்த ஆட்டோவுக்கு பெண் போலீஸ் ஒருவர் தீ வைத்த வீடியோ, இன்னொரு ஆண் போலீஸ் குடிசை வீடு ஒன்றுக்கு தீ வைத்த வீடியோ ஆகியவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியதோடு காவல்துறைக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வீட்டிற்கு தீ வைத்த பெண் போலிசும், ஆட்டோவுக்கு தீ வைத்த ஆண் போலிசும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

முதல்வருக்கு ராகவா லாரன்ஸ் வைத்த மூன்று கோரிக்கைகள்

மாணவர்கள் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து பெரும் உதவி செய்து வந்தவர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. போராட்டத்தின் கடைசி நாளன்று ஏற்பட்ட வன்முறையின்போதும் அவர் பதட்டத்தை குறைக்க மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையும் அனைவரும் அறிவோம்...

பார்வையற்றவர்களுக்காக சிறப்பு சலுகை செய்த 'அதே கண்கள்' தயாரிப்பாளர்

கலையரசன் நடிப்பில் சி.வி.குமார் தயாரித்த 'அதே கண்கள்' திரைப்படம் கடந்த குடியரசு தினத்தில் வெளியாகி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நிவின்பாலி-நட்டி நட்ராஜ் பட டைட்டில் அறிவிப்பு

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் தமிழ் படம் ஒன்றை அறிமுக இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி அறையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை. செல்போன் கேமிராவில் வீடியோ பதிவு

கேரள மாநிலத்தில் கள்ளக்காதல் ஜோடி தனத்தனியாக ஒரே நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலையை இருவரும் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

புனே இன்போசிஸ் அலுவலகத்தில் கேரள இளம்பெண் கொலை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலையான பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது புனே இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய கேரளாவை சேர்ந்த இளம்பெண் ரசிலா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்...