டிக்டாக் நட்பால் விபரீதம்: மனைவியை தொலைத்த கணவரின் பரிதாப நிலை!

  • IndiaGlitz, [Monday,December 16 2019]

டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்வது என்பது ஆரம்பத்தில் ஒரு பொழுதுபோக்காக இருந்த நிலையில் தற்போது அதுவே பலருக்கு போதையாக மாறிவிட்டது. இந்த டிக்டாக் செயலியில் பதிவு செய்யும் வீடியோக்களால் பலரது குடும்பங்களிலும் பிரச்சனை ஏற்பட்டு சில இடங்களில் கொலை மற்றும் தற்கொலை நடந்துள்ளது என்பது பரிதாபத்துக்குரியது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒருவர் டிக்டாக் அப் வீடியோவால் தனது மனைவியை தொலைத்துவிட்டு இருக்கும் பரிதாபமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆதோனி என்ற பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு திடீரென டிக்டாக் மேல் கவனம் எழுந்துள்ளது. அடிக்கடி டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்துள்ள அர்ச்சனாவுக்கு, அஞ்சலி என்ற பெண் நட்பாகி உள்ளார். இருவரும் நெருங்கிய நட்பில் இருந்த நிலையில் ஒரு நாள் அஞ்சலி திடீரென அர்ச்சனாவின் வீட்டிற்கு வந்த அஞ்சலி, கிட்டத்தட்ட ஒரு வாரம் தங்கி உள்ளார். இந்த ஒரு வாரத்தில் இருவருக்கும் இடையேயான நட்பு மேலும் நெருக்கமானதாக தெரிகிறது.

இதனை அவரது கணவர் கண்டித்த நிலையில், கணவன் கண்டித்ததால் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு குழந்தைகளுடன் அர்ச்சனா சென்றுவிட்டார். இந்த நிலையில் திடீரென அர்ச்சனா தனது தாயார் வீட்டில் இருந்தும் குழந்தைகளுடன் வெளியேறி தலைமறைவாகி விட்டதாகவும், இப்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் தெரிகிறது.

இது குறித்து ரவிக்குமார் போலீசில் புகார் செய்த நிலையில் போலீசார் அஞ்சலியை விசாரித்துள்ளனர். ஆனால் அஞ்சலியை தனக்கு அர்ச்சனா எங்கிருக்கின்றார் என்று தெரியாது என்று கூறியுள்ளார். இருப்பினும் அவர் மேல் போலீசார் சந்தேக கண் வைத்துள்ளனர். டிக்டாக் வீடியோவை பதிவு செய்ததை கண்டித்ததால் ரவிக்குமார் தனது மனைவியை தொலைத்துவிட்டு பரிதாபமாக உள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.