close
Choose your channels

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 சிறுவர்கள்… பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

Saturday, January 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒருவரை 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதை வீடியோ எடுத்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட வீடியோ, பலருக்கும் பகிரப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி இருக்கிறார். இதனால் உத்திர மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சமீபகாலமாக உத்திரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன. இதனால் புதிய சட்டத்தையும் அதன் முதல்வர் யோகி ஆதித்யனார் கொண்டு வந்தார். ஆனாலும் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாலியல் முறைகேடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை அன்று உத்திரப்பிரதேசத்தின் படவுன் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒருவரை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதை வீடியோவாகவும் எடுத்து இருக்கின்றனர்.

அந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட பெண்ணையும் அந்தக் கும்பல் மிரட்டி இருக்கிறது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோவால் மிரண்டு போன அந்தப் பெண்மணி தற்போது புகார் அளித்து இருக்கிறார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் மிகவும் சிறிய வயதுடையவர்கள் என்றும் அப்பெண்மணி குற்றம் சாட்டி இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment