close
Choose your channels

இப்படிக்கூட நடக்குமா??? எங்களுக்கு வரியப்போட்டு கொரோனாவிற்கு நிதியை எடுத்துக்கோங்க... வியப்பூட்டும் அறிவிப்பு!!!

Tuesday, July 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இப்படிக்கூட நடக்குமா??? எங்களுக்கு வரியப்போட்டு கொரோனாவிற்கு நிதியை எடுத்துக்கோங்க... வியப்பூட்டும் அறிவிப்பு!!!

 

கொரோனா வைரஸ் காலத்தில் அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றன. பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் நாடுகளும் இருக்கின்றன. இதுபோன்ற நேரத்தில் மக்களிடம் அதிக வரியை பெற்று நிலைமையை சமாளிக்கவும் ஒரு சில நாடுகளில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உலகில் உள்ள சூப்பர் பணக்காரர்கள் சிலர் தற்போது தனாக முன்வந்து மில்லியனர்களுக்கு அதிக வரியை கணிசமாக நிர்ணயித்து உலக நாடுகள் கொரோனா நெருக்கடிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து உலகின் சில முக்கிய பணக்காரர்கள் இணைந்து பெரும்பாலான நாடுகளின் அரசுகளுக்கு “மனித நேயமிக்க மில்லியனர்கள்” என்ற பெயரில் கடிதத்தை அனுப்பியிருக்கின்றனர். இக்கடிதத்தில் பென் மற்றும் ஜெர்ரி ஐஸ் கிரீம் நிறுவனத்தின் இணைநிறுவனர் ஜெர்ரி கிரீன் ஃபீல்ட், பிரபல திரைக்கதை எழுத்தாளர் ரிச்சர்ட் காட்டிஸ், திரைப்பட தயாரிப்பாளர் அடிகெய் டிஸ்னி, அமெரிக்க தொழிலதிபர் சிட்னி டோடோல், நியூசிலாந்தின் வணிகர் ஸ்டீபன் போன்றோர் கையெழுத்திட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகப் பணக்காரர்கள் இப்படி தாங்களாகவே முன்வந்து மனித நேயமிக்கச் செயலுக்காக வரியை விதிக்குமாறு கேட்டிருப்பது பலரது மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகின் முக்கியமான 80 பணக்காரர்கள் இந்த கடிதத்தைக் குறித்து விருப்பதையும் தெரிவித்து இருக்கின்றனர். வரவிருக்கும் ஜி20 நிதியமைச்சர் மாநாட்டில் இக்கடிதம் வாசிக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்து தொழிலதிபர் திங்க் டோக்ஸ் பணக்காரர்களுக்கு மட்டுமல்லாது சாமானிய மக்களுக்கும் இதுதான் நிலைமை என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார். நிதி நிலைமையை சமாளிக்க தற்போது ரஷ்ய அரசாங்கம் மில்லியனர்களுக்கு அதிக வரி விதிக்கும் யோசனையில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கலாம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறது. அரபு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் விற்பனையிலும் அதி வரியை விதிக்கும் செயல்பாடுகளில் இறங்க நினைத்து இருக்கிறது. இப்படி உலகத்தையே கொரோனா வைரஸ் பல நெருக்கடிக்குள் சிக்க வைத்து இருந்தாலும் மனித நேயத்தை நினைவூட்டும் நடவடிக்கைகளும் தொடருவது வரவேற்கத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment