ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா சாயிஷா?

  • IndiaGlitz, [Wednesday,July 25 2018]

விஜய் இயக்கிய 'வனமகன்' படத்தில் அறிமுகமான சாயிஷா, அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் கார்த்தியுடன் சாயிஷா நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து வரும் வெள்ளியன்று விஜய்சேதுபதியுடன் அவர் நடித்த 'ஜூங்கா' படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆர்யாவுடன் சாயிஷா நடித்த 'கஜினிகாந்த்' திரைப்படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமாரின் 3வது படம் இது என்பதால் இந்த படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு பின்னர் 'ஜூங்கா' மற்றும் 'கஜினிகாந்த்' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் சாயிஷாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும். இந்த அதிசயம் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் தற்போது சாயிஷா, கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் நாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இதற்காகத்தான் படபூஜையில் கலந்து கொள்வதில்லை: சமந்தா

பிரபல நடிகை சமந்தாவுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டு என்றே கூறலாம்.

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கடந்த ஆண்டு தனது 100வது தயாரிப்பு திரைப்படமாக விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை

மும்தாஜை அழவைத்த ஷாரிக்: பிக்பாஸ் திரைக்கதையில் திடீர் டுவிஸ்ட்

பிக்பாஸ் முதல் பாகம் போல் இரண்டாம் பாகத்தையும் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் பல்வேறு முயற்சி செய்தும் 37 நாட்களாக எந்தவித பலன் கிடைக்கவில்லை

ரஜினியை விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டாம்: சென்னை ஐகோர்ட் கண்டனம்

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயர்களை பயன்படுத்தி விளம்பரம் தேட வேண்டாம் என்று வழக்கு தொடுத்த ஒருவருக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1983ல் இருந்தே பாலியல் தொல்லை உள்ளது: பழம்பெரும் நடிகை அதிர்ச்சி பேட்டி

கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவுலகில் பாலியல் பிரச்சனை இருப்பதாகவும், இல்லை என்று யாரும் கூறமுடியாது என்றும் கூறியுள்ளார்.