சினேகனுடன் ஜோடி சேரும் ஓவியா! கட்டிப்பிடி வைத்தியம் இருக்குமா?

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல வருடங்கள் திரையுலகில் இருந்தவர்களுக்கு கிடைக்காத புகழ், ஒருசில நாட்களில் ஓவியாவுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று நூலிழையில் பட்டத்தை தவறவிட்டவர் கவிஞர் சினேகன்.

இந்த நிலையில் சினேகன் நடித்து வரும் 'பனங்காட்டு நரி' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கணேஷ்பாபு என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஓவியாவிடம் இந்த படத்தின் ஒன்லைன் கதையை கூறியுள்ளதாகவும், முழு கதையையும் கேட்ட பின்னர் இந்த படத்தில் நடிப்பது குறித்து ஓவியா முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது

சினேகன் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கட்டிப்பிடி வைத்தியம்தான். அவரது இந்த ஸ்டைல் அவர் நடிக்கும் படத்திலும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தளபதி விஜய்க்கு கிடைத்த 'மெர்சலான' வெற்றி

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெற்றி பெற்ற போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வெற்றிப்படமாகிறது.

தோனி என்னும் தலைவன்: சிறப்பு தொடர்

தல தோனி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமின்றி பல நல்ல பண்புகளை கொண்டு அனைவரும் மதிக்கும் வகையில் நடந்து கொண்டவர்.

முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து எது தெரியுமா? கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளார்.

நேற்று ஸ்டாலின் பழமொழிகள், இன்று அமித்ஷா உளறல்கள்: நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்

கடந்த இரண்டு நாட்களாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்றும் பூனை மேல் மதில் போல் என்றும் பழமொழிகளை மாற்றி சொன்னதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார்.

விஜய்யின் இந்த திடீர் மாற்றம் ஏன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார்.