மனம் மாறிய நித்யா: பிக்பாஸ் செய்த ஒரே உருப்படியான விஷயம்

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

கடந்த இரண்டு மாதங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர எத்தனையோ முயற்சி எடுத்தும் தோல்வியில்தான் முடிந்தது. கடைசியில் மகத்தின் வெளியேற்றமும், உறவினர்களின் செண்டிமெண்டும், முதல்முறையாக கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவுகளும் நிகழ்ச்சியை பாசிட்டிவ்வாக மாற்றியுள்ளது..

இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சி அழுகாச்சியாக சென்று கொண்டிருந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இருப்பது ஒருவகையில் நிம்மதியே. குறிப்பாக பாலாஜியின் மனைவி நித்யா எழுதிய கடிதத்தால் பாலாஜி கண்கலங்கியது கல்நெஞ்சையும் கறைய வைத்தது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நித்யா தனது குழந்தையுடன் வருகிறார். இந்த ஒன்பது வருடத்தில் பாலாஜியின் கண்ணில் முதல்முறையாக கண்ணிரை பார்ப்பதாக கூறிய நித்யா, பாலாஜி மாறிவிட்டதையும் ஒப்புக்கொள்கிறார். அனேகமாக பாலாஜி இந்த வீட்டில் இருந்து வெளியேறியவுடன் மீண்டும் இருவரும் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பார்வையாளர்களுக்கு பல மன உளைச்சல்கள் இருந்தாலும் பாலாஜி குடும்பத்தை சேர்த்து வைத்து பிக்பாஸ் ஒரு உருப்படியான காரியத்தை செய்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.

More News

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியா? கமல் பதில்

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் காலமானதை அடுத்து இந்த இரு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது.

நான் அப்பா ஆயிட்டேன்: உணர்ச்சிவசப்பட்ட செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய செண்ட்ராயன், அப்பாவி போல் தெரிந்தாலும் பல விவரமானவர்களை மீறி மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். 70 நாட்களையும் தாண்டி அவர் பிக்பாஸ் வீட்டில்

பிரபுதேவாவின் அடுத்த பட டைட்டில், தயாரிப்பாளர் அறிவிப்பு

பிரபுதேவா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'லஷ்மி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் பூஜை சற்றுமுன் சென்னையில் நடந்தது.

விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்டுக்கள்

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காரில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடுவது வைரலாகி வருகிறது. இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் இந்த கிகி நடனத்தை ஆடி

சிவகார்த்திகேயன் மகளால் பிரபலமான பாடலாசிரியர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கனா'. இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷும்,