மணிரத்னம் அறிவுரையை மாதவன் ஏற்பாரா?

  • IndiaGlitz, [Friday,February 12 2016]

மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாதவன் மற்றும் மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக புரமோஷன் பெற்றுள்ள இயக்குனர் சுதாவும் இணைந்த 'இறுதிச்சுற்று' திரைப்படம் உள்ளூர் நட்சத்திரங்கள் முதல் உலக அளவில் மைக்டைசன் வரை பாராட்டுக்கள் தெரிவித்ததை பல செய்திகளில் பார்த்துள்ளோம்.
இந்நிலையில் சமீபத்தில் 'இறுதிச்சுற்று' படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் மணிரத்னம், 'மாதவனின் படிப்படியான வளர்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் அவர் தமிழ் படங்களில் அதிகம் நடிக்க தனது கவனத்தை செலுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார். 'வேட்டை' படத்திற்கு பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்தே அவர் நடித்த 'இறுதிச்சுற்று' வெளியாகியுள்ளதைத்தான் மணிரத்னம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது. மணிரத்னத்தின் அறிவுரையை ஏற்று மாதவன் இன்னும் அதிக தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில் இறுதிச்சுற்று' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக 'இறுதிச்சுற்று' கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.