close
Choose your channels

கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி: 10 நாட்களுக்கு பின் என்ன செய்தார் தெரியுமா?

Thursday, August 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்த நிலையில் பத்து நாட்கள் கழித்து போலீசில் சரண் அடைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சோமமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு விமலா ராணி 37வயது என்ற மனைவியும் ஹரிஷ் ராவத் என்ற 14 வயது மகனும் உள்ளார். இந்த நிலையில் திடீரென தங்கவேலு மாயமாகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரது சகோதரர் சக்திவேல் அவ்வப்போது விமலா ராணியிடம் தங்கவேல் குறித்து விசாரித்துள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் சொல்லவில்லை என தெரிகிறது

இந்த நிலையில் சக்திவேல் சோமமங்கலம் காவல் நிலையத்தில் தங்கவேலை காணவில்லை என புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில் தங்கவேலு மனைவி விமலா ராணி திடீரென தலைமறைவானார்.

இந்த நிலையில் 10 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் ஆஜரான விமலாராணி தனக்கும் தனது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து அறிவாள்மனையால் கணவரை வெட்டி கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இரவு வரை பிணத்தை வீட்டிலுள்ள பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் தனது கள்ளக்காதலரின் உதவியால் ஏரியில் தூக்கி போட்டதாக தெரிவித்துள்ளார்

ஆனால் ஏரியில் பிணம் கிடைக்காததை அடுத்து அவரிடம் மீண்டும் விசாரணை செய்தபோது அவர் கொடுத்த தகவலின்படி செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு என்ற பகுதியில் பாதி எரிந்த நிலையில் தங்கவேலு பிணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது விமலா ராணி கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாகியுள்ள விமலாராணியின் கள்ளக்காதலரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதலுக்காக தனது கணவரை கொலை செய்த பெண் ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment