close
Choose your channels

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலனும் உடந்தை

Thursday, March 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தர்மபுரி அருகே ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டிய கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவியின் கள்ளக்காதலனும் போலீசில் சிக்கியுள்ளார்.

தர்மபுரி அருகே பெரியாம்பட்டி என்ற கிராமத்தில் மாதேசன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மாதேசனுக்கு கட்ந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேலும் குடிப்பழக்கமும் இருந்ததால் அவர் விரைவில் மரணம் அடையும் வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாதேசன் மனைவி ரேவதி, தனது கணவர் பெயரில் ரூ.45 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என இரண்டு இன்சூரன்ஸ் போட்டு அதற்கு வாரீசாக தனது பெயரை போட்டுள்ளார்.

இந்த நிலையில் திடீரென மாதேசன், தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் இறந்து கிடந்தார். விபத்து காரணமாக மாதேசன் இறந்திருக்கலாம் என்று கருதிய போலீசார் அவரது மரணத்தை விபத்து மரணமாக பதிவு செய்து கொண்டனர். ஆனால் கணவன் இறந்த துக்கமே இல்லாமல் மாதேசனின் மனைவி ரேவதி, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்குவதிலேயே கவனத்தை செலுத்தியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து ரேவதியை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸ் பாணியில் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ரேவதிக்கு ஜெயப்பிரகாஷ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததாகவும், உடல்நலமில்லாமல் இருக்கும் கணவர் மீது இரண்டு பெரிய இன்சூரன்ஸ் போட்டு பின்னர் அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து ரேவதி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment