close
Choose your channels

நான்வெஜ் சாப்பிட கட்டாயப்படுத்திய கணவரை அடித்தே கொலை செய்த மனைவி!

Tuesday, December 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான்வெஜ் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்திய கணவர் ஒருவரை மனைவி கம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகாசியை அடுத்த மடத்துபட்டி என்ற பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று புரோட்டா மற்றும் நான்வெஜ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். தனது மனைவி தனலட்சுமி மற்றும் தனது மகன் அரவிந்த் ஆகிய இருவருக்கும் கொடுத்து அதனை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.

ஆனால் தனது உறவினர் ஒருவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு உள்ளதால் நான்வெஜ் சாப்பிட மாட்டேன் என்று தனலட்சுமி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் மனைவியை அடித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து  தனலட்சுமியும் அவருடைய சகோதரர் சஞ்சீவி என்பவரும் இணைந்து முத்துராஜை கம்பால் அடித்து கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது தனலட்சுமி தலைமறைவாகி இருந்தார் ஆனால் அதே பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் ஒளிந்து இருப்பதை கண்டுபிடித்த போலீசார் தனலட்சுமியையும் அவரது தன் சகோதரர் சஞ்சிவியையும் கைது செய்து இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்

நான்வெஜ் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்திய கணவரை மனைவி அடித்தே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment