கணவனை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி!

  • IndiaGlitz, [Friday,March 29 2019]

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் கணவரை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடலூரை சேர்ந்த அய்யாபிள்ளை என்பவருக்கு பரிமளா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். அய்யாபிள்ளை அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அய்யாப்பிள்ளை வழக்கம்போல் குடித்துவிட்டு பரிமளாவிடம் தகறாரு செய்ய இருவருக்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது. இதில் பரிமளா தாக்கியதில் அய்யாப்பிள்ளை மயங்கி விழுந்தார். குடிபோதையில் மயங்கி விழுந்த அய்யாப்பிள்ளை, சிறிது நேரம் கழித்து எழுந்துவிடுவார் என்று பரிமளா அசால்ட்டாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவு ஆகியும் அய்யாப்பிள்ளை எழுந்திருக்காததால் பதட்டம் அடைந்த பரிமளா அவரது முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப முயன்றபோது தான் அவர் மரணம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா, யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் இருந்த கழிவுநீர்த்தொட்டியில் அய்யாப்பிள்ளையின் பிணத்தை போட்டுவிட்டு மறுநாள் காலை கணவர் காணாமல் போனதாக நாடகமாடினார்.

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்த பரிமளாவை போலீசார் தங்கள் பாணியில் விசாரணை செய்தபோது, கணவரை கொலை செய்ததை பரிமளா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

More News

சரவணபவன் ராஜாகோபால் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

கொலை வழக்கு ஒன்றில் சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதி செய்துள்ளது.

சூப்பர் டீலக்ஸ்: சமந்தாவின் நடிப்புக்கு சர்வதேச ஊடகம் பாராட்டு

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, நடிப்பில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

நமீதா காரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் ஆணையத்தின் ஒரு பிரிவான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பாரத பிரதமர்: பிரேமலதா உளறல்

அதிமுக கூட்டணியில் இணைந்து நான்கு தொகுதிகளை பெற்ற விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்  செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் ஆணையத்திடம் இருந்து தினகரனுக்கு கிடைத்த பரிசு!

இரட்டை இலை சின்னம், குக்கர் சின்னம் ஆகியவற்றுக்காக சட்டப்போராட்டம் நடத்தி தோல்வி அடைந்த தினகரனுக்கு கடைசியில் பொது சின்னமாவது கிடைக்குமா? என்ற நிலை இருந்தது.