close
Choose your channels

கணவனை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி!

Friday, March 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் கணவரை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடலூரை சேர்ந்த அய்யாபிள்ளை என்பவருக்கு பரிமளா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். அய்யாபிள்ளை அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அய்யாப்பிள்ளை வழக்கம்போல் குடித்துவிட்டு பரிமளாவிடம் தகறாரு செய்ய இருவருக்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது. இதில் பரிமளா தாக்கியதில் அய்யாப்பிள்ளை மயங்கி விழுந்தார். குடிபோதையில் மயங்கி விழுந்த அய்யாப்பிள்ளை, சிறிது நேரம் கழித்து எழுந்துவிடுவார் என்று பரிமளா அசால்ட்டாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவு ஆகியும் அய்யாப்பிள்ளை எழுந்திருக்காததால் பதட்டம் அடைந்த பரிமளா அவரது முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப முயன்றபோது தான் அவர் மரணம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா, யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் இருந்த கழிவுநீர்த்தொட்டியில் அய்யாப்பிள்ளையின் பிணத்தை போட்டுவிட்டு மறுநாள் காலை கணவர் காணாமல் போனதாக நாடகமாடினார்.

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்த பரிமளாவை போலீசார் தங்கள் பாணியில் விசாரணை செய்தபோது, கணவரை கொலை செய்ததை பரிமளா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment