கணவரை கொன்று புதைத்த இடத்தை அடுப்பங்கரையாக மாற்றிய மனைவி!

  • IndiaGlitz, [Friday,November 22 2019]

‘பாபநாசம்’ என்ற படத்தில் கமல் ஒரு கொலை செய்து போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டு வரும் இடத்தில் புதைத்துவிடுவார். போலீசார் கடைசி வரை அந்த கொலையை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று அந்த படம் முடிவடைந்திருக்கும். அதேபோல் கணவரை கொலை செய்து புதைத்த இடத்தை அடுப்பங்கரையாக மாற்றி சமையல் செய்து வந்த பெண் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கரோண்டி என்ற பகுதியில் மகேஷ் மற்றும் பிரமிளா என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பிரமீளாவுக்கு தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. இந்த உறவை கண்டுபிடித்த மகேஷ் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரமிளா கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகேஷை கொலை செய்து, அவருடைய உடலை வீட்டிலேயே புதைத்து அந்த இடத்தை அடுப்பங்கரை மாற்றிவிட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் மகேஷின் சகோதரி தனது தம்பியை காணவில்லை என்றும் தனது தம்பி காணாமல் போனதற்கு பிரமிளா காரணமாக இருக்கலாம் என்று தான் சந்தேகப்படுவதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வந்த போலீசார் பிரமிளாவிடம் கிடுக்கிபிடி விசாரணை செய்தபோது அவர் தனது கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்

தனக்கும் கங்காதரன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும் அந்த தொடர்பு தனது கணவருக்கு தெரிந்து விட்டதால், கள்ளகாதலன் உதவியோடு கணவரை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து அந்த இடத்தை அடுப்பங்கரையாக மாற்றிவிட்டதாகவும் வாக்குமூலம் கூறியுள்ளார். இதனையடுத்து பிரமிளாவை போலீசார் கைது செய்தனர்.