'குக் வித் கோமாளி' கடந்த வார எபிசோடில் கலந்து கொள்ளாதது ஏன்? ஜோயா கூறிய அதிர்ச்சி காரணம்.!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி ’ சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வார எபிசோடில் ஜோயா கலந்து கொள்ளாதது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக கடந்த வாரம் அவர் கலந்து கொண்டிருந்தால் அவரும் செஃப் ஆப் தி வீக் வாங்கி இருப்பார் என்று குரேஷி சொன்ன ஜோக்கை அனைவரும் ரசித்தனர். ஏனெனில் கடந்த வாரம் கலந்து கொண்ட அனைவருக்கும் செஃப் ஆப் தி வீக் பட்டம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோயாவின் மலையாளம் கலந்த செல்ல தமிழ், கொஞ்சும் அழகு, கோமாளி இடம் நடந்து கொள்ளும் விதம், நடுவர்களையே தமிழ் தெரியாமல் நீ வா போ என பேசுவது ஆகியவை ரசிக்கத்தக்க வகையில் இருப்பதாக இந்த சீசனை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சனி ஞாயிறு அன்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி எபிசோடில் ஜோயா கலந்து கொள்ளாததை அடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் ’நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை’ என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ’தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உங்கள் உடல்நிலையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவருக்கு ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.