தேசிய விருதை திருப்பி அளிப்பாரா வித்யாபாலன்?

  • IndiaGlitz, [Friday,October 30 2015]

எப்.டி.ஐ.ஐ மாணவர்களை ஆதரித்தும், நாட்டில் பெருகி வரும் மத சகிப்புத் தன்மையற்ற நிலையைக் கண்டித்தும் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர்கள், பத்ம விருது பெற்றவர்கள், திரைப்படத்துறையில் விருது பெற்றவர்கள் ஆகியோர்கள் தங்களை விருதுகளை திருப்பி அளித்து வரும் நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன், தான் பெற்ற விருதை திருப்பி தரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வித்யாபாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, 'எனக்கு கிடைத்த விருது தேசத்தால் வழங்கப்பட்டது. அரசால் வழங்கப்பட்டது அல்ல. ஆதலால், நான் இந்த விருதை திரும்ப வழங்க வேண்டியது இல்லை. மேலும் எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. நான் அரசியலில் சேர்ந்தால் மோசமான தோல்வியை சந்திப்பேன் என்பது எனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே விருதுகளை திரும்ப ஒப்படைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என கவியரசு வைரமுத்து கூறியதை அடுத்து தற்போது வித்யாபாலனும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.