'தங்கலான்' ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ’தங்கலான்’ திரைப்படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கிறது. இதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தை தடை செய்யக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’தங்கலான்’ திரைப்படத்தில் புத்த மதத்தை புனிதமாகவும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளதாகவும், இப்படம் ஓடிடியில் வெளியானால் இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு முடிந்தால் தான் ’தங்கலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More News

சூர்யாவின் 45வது படம்.. லொகேஷன் பார்க்க தொடங்கிய இயக்குனர்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில், அவருடைய 45வது படத்தை இயக்கும் இயக்குநர் லொகேஷன் பார்க்கும்  புகைப்படத்தை தனது

சென்னை மெரினாவில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தவெக உறுப்பினர்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஐந்து பேர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அ

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ஷாலினி.. இதுதான் காரணமா?

அஜித்துக்கு, அவரது மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விவாகரத்தில் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு உடன்பாடு இல்லையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இருவருமே ஆஜராகவில்லை

'சுந்தரி' சீரியல் நடிகைக்கு குருவாயூரில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலில் நடித்த நடிகைக்கு குருவாயூரில் நேற்று திருமணம் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.