close
Choose your channels

'நம்ம ஊரு தொழிலாளிகள்': விஜய்யின் பாசம்

Friday, March 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். ஏனெனில் படப்பிடிப்பு நடக்கும்போது ரசிகர்களின் அன்புத்தொல்லை இருக்கும் என்ற காரணத்தாலே இந்த முடிவை படக்குழுவினர் எடுப்பதுண்டு.

ஆனால் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்ப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையை சுற்றி சுற்றியே நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், 'நம்ம ஊரு தொழிலாளிரகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்புக்கு ரசிகர்களால் சில பிரச்சனைகள் இருந்தாலும் நம்ம ஊரு தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கட்டும் என்ற காரணத்தால் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த விஜய் கேட்டு கொண்டதை அறிந்ததும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பும் சென்னையில் தான் நடைபெறவிருப்பதாகவும் சென்னை ஈசிஆர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான கால்பந்து மைதானத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தளபதி 63' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment