'நம்ம ஊரு தொழிலாளிகள்': விஜய்யின் பாசம்

  • IndiaGlitz, [Friday,March 29 2019]

பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். ஏனெனில் படப்பிடிப்பு நடக்கும்போது ரசிகர்களின் அன்புத்தொல்லை இருக்கும் என்ற காரணத்தாலே இந்த முடிவை படக்குழுவினர் எடுப்பதுண்டு.

ஆனால் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்ப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையை சுற்றி சுற்றியே நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், 'நம்ம ஊரு தொழிலாளிரகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்புக்கு ரசிகர்களால் சில பிரச்சனைகள் இருந்தாலும் நம்ம ஊரு தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கட்டும் என்ற காரணத்தால் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த விஜய் கேட்டு கொண்டதை அறிந்ததும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பும் சென்னையில் தான் நடைபெறவிருப்பதாகவும் சென்னை ஈசிஆர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான கால்பந்து மைதானத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தளபதி 63' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

ரஜினி படத்தை ஆரம்பிக்கும் முன் ஏ.ஆர்.முருகதாஸ் சென்ற இடம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்தவுடன் திருப்பதி சென்று அந்த படத்தின் வெற்றிக்காக வழிபடுவதுண்டு. அந்த வகையில்

கணவனை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் கணவரை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சரவணபவன் ராஜாகோபால் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

கொலை வழக்கு ஒன்றில் சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதி செய்துள்ளது.

சூப்பர் டீலக்ஸ்: சமந்தாவின் நடிப்புக்கு சர்வதேச ஊடகம் பாராட்டு

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, நடிப்பில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

நமீதா காரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் ஆணையத்தின் ஒரு பிரிவான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.