'வேதாளம்' டைட்டில் குறித்த சுவாரஸ்யமான தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 29 2015]

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் அஜீத்தின் கேரக்டர் அநியாயத்தை தட்டி கேட்பதாகவும், எங்கே அநியாயம் நடந்தாலும் அந்த இடத்தில் உடனே தோன்றி அக்கிரமம் செய்பவர்களை துவம்சம் செய்வது போன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கேரக்டருக்கு ஏற்ற சரியான டைட்டிலாக 'வேதாளம்' டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த டைட்டில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்திற்காக முடிவு செய்யப்பட்டிருந்ததாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது என்பது அனைவரும் அறிவோம். ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ஒன்றுக்காக அந்த படத்தில் பணிபுரிவதாக இருந்த உதவி இயக்குனர் சூரி என்பவர்தான் இந்த டைட்டிலை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட அஜீத், அந்த உதவி இயக்குனர் சூரிக்கு 'வேதாளம்' டைட்டிலுக்கு உரிய பணத்தை கொடுத்து செட்டில் செய்யும்படி தயாரிப்பு நிறுவனத்தை கேட்டுக்கொண்டதாகவும், அஜீத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உதவி இயக்குனர் சூரிக்கு தயாரிப்பாளர் பணத்தை செட்டில் செய்ததாகவும் கூறப்படுகிறது.