'வணங்கான்' படத்தில் இருந்து விலகியது ஏன்? சூர்யா-பாலா இடையே என்ன பிரச்சனை: கீர்த்தி ஷெட்டி

  • IndiaGlitz, [Saturday,May 06 2023]

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் ’வணங்கான்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாகி வந்த நிலையில் திடீரென இந்த படம் நிறுத்தப்பட்டது என்பதும் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியது மட்டுமின்றி இந்த படத்தை தயாரிப்பதில் இருந்தும் வெளியேறினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இதே படத்தில் சூர்யாக்கு பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’வணங்கான்’ படத்தில் சூர்யா நடித்து கொண்டிருந்தபோது அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வந்தார். ஆனால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து கீர்த்தி ஷெட்டியும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ’வணங்கான்’ படத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார். ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானதை அடுத்து தான் இந்த படத்தில் இருந்து விலகியதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி சூர்யா மற்றும் பாலா இடையே படைப்பாற்றலில் தான் கருத்து வித்தியாசம் இருந்தது என்றும் ஊடகங்களில் வரும் செய்திகளில் இருப்பது போல பாலா - சூர்யா இடையே எந்த விதமான கருத்து வேறுபாடு அல்லது சர்ச்சை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’கஸ்டடி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் இந்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.