விஜய் நோ சொன்னதால் தான் கைமாறியதா 'கோட்' திரைப்படம்? என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

சன் டிவி விதித்த நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொள்ளாததால் தான் ‘கோட்’திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவியில் இருந்து ஜீடிவிக்கு கை மாறியதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி வாங்கியதாக முதலில் செய்திகள் வெளியான நிலையில் அதன் பிறகு இந்த படம் ஜி டிவிக்கு கை மாறிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற சன் டிவி சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அதில் ஒன்று சன் டிவிக்கு விஜய் இரண்டு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிபந்தனையை ஒரு வினாடி கூட தாமதம் செய்யாமல் விஜய் 'நோ’ என்று கூறிய ஏற்க மறுத்து விட்டதாகவும் இதனை அடுத்து ‘கோட்’ திரைப்படத்தின் உரிமையை சன் டிவி வாங்கவில்லை என்றும் அதனை அடுத்து தான் ஜி டிவிக்கு இந்த படத்தை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘கோட்’ படத்தை வாங்குவதாக இருந்தால் ரிலீஸ் செய்த ஒரு மாதத்திற்கு சன் டிவியில் ஒளிபரப்பி விடுவோம் என்றும், நாங்கள் சொல்லும் தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும், அரசியல் சம்பந்தமான காட்சிகள் படத்தில் இருக்கக் கூடாது என்றும் சன் டிவி நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் இவை வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

5 வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருக்கும் கமல்ஹாசன் படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

உலகநாயகன் கமல்ஹாசன் திரை உலக வாழ்வில் ஒரு திரைப்படம் ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்த ஒரே படம் ' இந்தியன் 2' படம் தான். இந்த படம் ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த நிலையில் தற்போது தான்

சூர்யாவின் அடுத்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்கள்.. 600 கோடி பட்ஜெட்டா?

நடிகர் சூர்யா 'கர்ணா' என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ள நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாக

நான் ஒரு ஓரின சேர்க்கையாளனா? சுசி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்..!

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பாடகி சுசி தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச் சேர்க்கையாளர் என குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் அதற்கு கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

கோவிலுக்கு போகாதீர்கள் என சொன்னது ஏன்? இயக்குனர் மிஷ்கின் விளக்கம்.

கோவிலுக்கு செல்லாதீர்கள் என தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்

'சூர்யா 44' படப்பிடிப்பு இந்த தீவிலா? கார்த்திக் சுப்புராஜின் மாஸ் பிளான்..!

நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 44வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள், எந்த இடத்தில் படப்பிடிப்பு, எத்தனை நாள்