நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் தமிழக பெண்களுக்கு கொடுக்காதது ஏன்? நீதிபதிகள் வேதனை 

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பேருந்து ஒன்றில் ஐவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது நாடே கொதித்தெழுந்தது. தேசிய ஊடகங்கள் 24 மணி நேரமும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். நிர்பயாவுக்கு சிங்கப்பூரில் சிகிச்சை செய்ய பிரதமரே முன்வந்து உதவினார். நிர்பயா சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தபோது நாடே அந்த ஒரு பெண்ணுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. நிர்பயாவுக்கு நடந்தது மிகப்பெரிய கொடுமைதான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் நிர்பயா போல் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஊரகப்பகுதியில் பாதிக்கப்படும்போது அந்தந்த மாநிலத்தில் உள்ள ஊடகங்களே பெரிய அளவில் முக்கியத்துவம் தருவதில்லை.

குறிப்பாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொழுந்துவிட்டெரியும் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து தேசிய ஊடகங்களும் மகளிர் அமைப்புகளும் கண்டுகொள்ளவே இல்லை என்பதே பலருடைய ஆதங்கமாக இருந்தது. இதனை இன்று ஒரு வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகளே தெரிவித்துள்ளனர்.

இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து கூறிய நீதிபதிகள், 'டெல்லியில் நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தேசிய ஊடகங்கள் ஊரக பகுதிகளை புறக்கணிக்கின்றன என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.
 

More News

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்.

சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த தயாரிப்பு படத்தில்  புரொடக்சன்ஸ் "தயாரிப்பு எண் 2" படத்தில்

பொள்ளாட்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு ஜாமீனா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தையே உலுக்கி வரும் பொள்ளாட்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரீசன் உள்பட 4 பேர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்த விஜய்சேதுபதி!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா-மாதவன்

'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் சூர்யாவும் மாதவனும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். அதன்பின் கமல்ஹாசன், மாதவன் நடித்த 'மன்மதன் அன்பு' படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

நோபல் பரிசு பெற்றவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பாலிவுட்-ஹாலிவுட் கலைஞர்கள்

அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் எடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.