நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தாமதம் ஏன்? கவுதம் மேனன் மீது புகார்

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

'நரகாசுரன்' படத்தை இயக்கிய இளாம் இயக்குனர் கார்த்திக் நரேன், கவுதம் மேனன் குறித்து கூறிய குற்றச்சாட்டால் கோலிவுட் திரையுலகமே பரபரப்பில் இருக்கும் நிலையில் செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீஸ் தாமதத்திற்கும் கவுதம் மேனனே காரணம் என தயாரிப்பாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. கடந்த ஆண்டே பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போய்க்கொண்டிருந்த இந்த படம் தற்போது எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சித்தார்த் ராவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'கடந்த ஒரு வருடமாக நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸ் தாமதம் குறித்து கேள்வி எழுப்பும் அனைவருக்கும் இதில் பதில் இருக்கிறது என்று கவுதம் மேனன் மீதான இயக்குனர் கார்த்திக் நரேனின் டுவீட்டை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார். இதனால் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் தாமதத்திற்கும் கவுதம்மேனனே காரணம் என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை கவுதம் மேனன் மறுத்துள்ளார். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் தயாரிப்பாளரோ அல்லது பங்குதாரரோ நான் இல்லை என்றும் எனது பெயர் விளம்பரத்திற்காக அந்த படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றும் கவுதம்மேனன் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்விக்குறியுடன் தான் இன்னும் உள்ளது.

More News

அப்ப காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் ப்ளீஸ்: நெட்டிசன்கள் கிண்டல்

காவிரி மேலாண்மை அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதற்காக கடந்த சிலநாட்களாக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரபல இயக்குனர் மீது நடிகை கூறிய பாலியல் புகார்

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது காலங்காலமாக நடைபெற்று வந்தாலும், கடந்த சில வருடங்களாக நடிகைகள் இதனை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

வாழ்க்கை ஒரு வட்டம்: ராம்கோபால்வர்மா கூறிய உதாரணம் இதுதான்

தளபதி விஜய் நடித்த ஒரு படத்தில் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற வசனம் வரும். இந்த வசனம் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும்,. இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால்வர்மா வாழ்விலும் தற்போது நடந்துள்ளது.

விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதிக்கு பிரபல இயக்குனர் கொடுத்த பட்டம்

நடிகர் விஜய்சேதுபதி பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான 'தர்மதுரை' படத்தில் நடித்தபோது அவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை கொடுத்தார்.

பெற்ற தாயை மதுவுக்காக கொலை செய்த மகன்

குடிகார மகனை தாய் கண்டிப்பதைத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மதுவுக்காக மல்லுக்கட்டி பெற்ற தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.