close
Choose your channels

சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்காதது ஏன்? முதல்முறையாக விளக்கமளித்த நயன்தாரா!

Sunday, August 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பெயரில் எந்தவித சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்ற நிலையில் சமூக வலைத்தளத்தில் கணக்குகள் தொடங்காதது ஏன் என்பது குறித்து விஜய் டிவியில் அளித்த பேட்டியில் அவர் விளக்கமளித்துள்ளார்.

விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை டிடி என்கிற திவ்யதர்ஷினி பேட்டி எடுத்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டாரில் வைரலாகி வரும் நிலையில் இதில் டிடி கேட்ட முதல் கேள்வியே ’சமூக வலைதளங்களில் ஏன் கணக்கு தொடங்கவில்லை என்பதுதான்.

அதற்கு பதிலளித்த நயன்தாரா ’நான் அடிப்படையில் ஒரு தனிமையை விரும்பும் நபர். எனக்கு என்னுடைய பர்சனல் விஷயங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்வது என்பது இயல்பிலேயே வராது. அதனால் நான் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்காமல் உள்ளேன். ஆனால் அதே நேரத்தில் நான் சமூக வலைதளங்களை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். பலவிதமான பாசிடிவ் விஷயங்கள் அதில் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சமூக வலைதளம் என்பது ஒரு மிகப்பெரிய பிளாட்பார்ம். அதை முழுக்க முழுக்க பாசிடிவ் விஷயங்களுக்கு பயன்படுத்தினால் இன்னும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். ஆனால் அதில் ஒரு சிலர் நெகட்டிவ் கருத்துக்களை பதிவு செய்து வருகின்ற்னர். அதை மட்டும் தவிர்த்தால் நல்லது’ என்று கூறினார். நயன்தாராவின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment