சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்காதது ஏன்? முதல்முறையாக விளக்கமளித்த நயன்தாரா!

  • IndiaGlitz, [Sunday,August 15 2021]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பெயரில் எந்தவித சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்ற நிலையில் சமூக வலைத்தளத்தில் கணக்குகள் தொடங்காதது ஏன் என்பது குறித்து விஜய் டிவியில் அளித்த பேட்டியில் அவர் விளக்கமளித்துள்ளார்.

விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை டிடி என்கிற திவ்யதர்ஷினி பேட்டி எடுத்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டாரில் வைரலாகி வரும் நிலையில் இதில் டிடி கேட்ட முதல் கேள்வியே ’சமூக வலைதளங்களில் ஏன் கணக்கு தொடங்கவில்லை என்பதுதான்.

அதற்கு பதிலளித்த நயன்தாரா ’நான் அடிப்படையில் ஒரு தனிமையை விரும்பும் நபர். எனக்கு என்னுடைய பர்சனல் விஷயங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்வது என்பது இயல்பிலேயே வராது. அதனால் நான் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்காமல் உள்ளேன். ஆனால் அதே நேரத்தில் நான் சமூக வலைதளங்களை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். பலவிதமான பாசிடிவ் விஷயங்கள் அதில் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சமூக வலைதளம் என்பது ஒரு மிகப்பெரிய பிளாட்பார்ம். அதை முழுக்க முழுக்க பாசிடிவ் விஷயங்களுக்கு பயன்படுத்தினால் இன்னும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். ஆனால் அதில் ஒரு சிலர் நெகட்டிவ் கருத்துக்களை பதிவு செய்து வருகின்ற்னர். அதை மட்டும் தவிர்த்தால் நல்லது’ என்று கூறினார். நயன்தாராவின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, கல்யாணம் எப்போது? நயன்தாரா பதில்!

விஜய் டிவியில் நயன்தாராவின் பேட்டி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக ஏற்கனவே புரமோஷன் வீடியோ வந்தது என்பதும் அந்த வீடியோவில் அவர் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது

சூப்பர் சிங்கர் பிரகதியா இவர்? வைரலாகும் பிகினி புகைப்படங்கள்

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்

அஜித்தை வைத்து 'பில்லா 3' இயக்குவீர்களா? இயக்குனர் விஷ்ணுவர்தன் பதில்!

அஜித் நடித்த 'பில்லா' மற்றும் 'பில்லா 2' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'பில்லா' படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன்

நடிகை மீரா மிதுனை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு: எத்தனை நாள் தெரியுமா?

நடிகையும், சூப்பர் மாடலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமீதுன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் பட்டியலினத்தவர்

மீராமிதுனின் ஆண் நண்பரும் கைது: விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல்!

பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று கேரளாவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி இருந்ததாக