close
Choose your channels

'2.0' வில்லனாக கமல் ஏன் நடிக்கவில்லை? ஷங்கர் விளக்கம்

Thursday, November 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் இந்த முறை திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் உறுதி என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அம்சமே வில்லன் கேரக்டர்தான். அந்த கேரக்டரில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், பாலிவுட் நடிகர் அமிதாப் முதல் பலர் பரிசீலிக்கப்பட்டனர். அதில் ஒருவர் கமல்ஹாசனும் கூட என்பது தெரிந்ததே. ஆனால் கமல் இந்த படத்தின் வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்ளாதது ஏன்? என்பது குறித்த தகவலை ஷங்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'2.0' படத்தின் வில்லன் கேரக்டர் கமலுக்கு பிடித்திருந்தாலும், அவர் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்ததால் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று ஷங்கர் கூறியுள்ளார். அதன் பின்னர் 'கத்தி' ரீமேக் படத்திற்காக லைகா நிறுவனம் அக்சயகுமாரிடம் பேசியபோது இந்த படம் குறித்து பேச்சுவந்ததால் அவர் கமிட் ஆனதாகவும் ஷங்கர் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment