கடைக்குட்டி சிங்கம் டைட்டில் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

கார்த்தி நடிப்பில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் , கார்த்தியின் சகோதரிகளாக மௌனிகா ,யுவராணி , தீபா , ஜீவிதா , இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். ஐந்து அக்காள்களுக்கு கார்த்தி தம்பி என்பதால் இந்த படத்திற்கு கடைக்குட்டி சிங்கம்' என்ற டைட்டில் வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படம் குறித்து படக்குழுவினர் மேலும் கூறியதாவது: கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி எஞ்சினியர், டாக்டர் என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.

இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐடி வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். “ கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் இயக்குநர் பாண்டிராஜ் ஆழமாக பேசியுள்ளார்.

படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகுநாளாச்சு என்று பாராட்டியுள்ளார். வெயில் , பனி , மழையென எதையும் பொருட்படுத்தாமல் கார்த்தி படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளார். சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு கடைக்குட்டிசிங்கம் என பெயர் வைத்துள்ளார்கள் என்ற எல்லோரும் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால் தான் இந்த டைட்டிலாம்.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவும், வீரசமர் கலை இயக்கத்தையும் செய்து வருகின்றனர். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.

 

More News

ஹாலிவுட் பாணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ரஜினியை ரகசியமாக சந்தித்தது எப்போது? கமல் விடுவித்த புதிர்

அரசியலுக்கு வருவது குறித்து ஆசான்களை சந்திப்பதற்கு முன்பே நண்பர் ரஜினிகாந்த் அவர்களை ரகசியமாக சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

13 வருடங்களுக்கு பின் கமல்-ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்னும் ஒருசில வாரங்களில் ரஜினியும் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்

கமல்ஹாசனுக்கு டி.என்.சேஷன் கொடுத்த மதிப்பு மிகுந்த டைட்டில்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது கட்சியின் கொள்கையையும் அறிவித்தார்.

கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு கமலின் பதில்களும்:

கமல் பதில்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனிமேல் உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டு விளக்கு. ஊழல் காற்றில் அனையாமல் பார்த்த் கொள்ளுங்கள்