சல்மான்கான் வேட்டையாடி கருப்பு மானில் அப்படி என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

மனிதர்களை கொலை செய்த பலரே தண்டனையின்றி சுதந்திரமாக உலாவி வரும் நிலையில் மான்களை கொன்ற ஒருவருக்கு ஐந்து வருடங்கள் சிறையா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. ஐந்து  வருடங்கள் தண்டனை கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அந்த மான் சிறந்தது?

1.சிந்து சமவெளி பள்ளத்தாக்கு நாகரிகத்தின்போதே இந்த கருப்புவகை மான் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் இந்த மான்கள் தான் மனிதர்களின் விரும்பத்தக்க உணவுப்பொருளில் ஒன்றாகவும் இருந்துள்ளது. இந்த மான் குறித்த பல்வேறு குறிப்புகள் சிந்து சமவெளி பள்ளத்தாக்கை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சி குறிப்புகளில் உள்ளது.

2. புராணங்களின்படி பார்க்கும்போது இந்த அரிய வகை மான்கள் ரதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணர் மற்றும் சந்திரன் வாகனங்களில் இந்த மான்கள் உள்ளது.

3. ராஜஸ்தான் மாநிலத்தில் கிருஷ்ணரை வழிபடும் பக்தர்கள் கிருஷ்ணனின் வாகனத்தில் இருக்கும் இந்த மானுக்கும் அதிகளவு முக்கியத்துவக் கொடுத்து வருகின்றனர்.

4. மேலும் இந்த மான், பருவ காலங்களுக்கு ஏற்ப வண்ணம் மாறும் அதிசயத்தை கொண்டது. கருப்புநிற இந்த மான்கள் மழைக்காலத்தில் வெள்ளை புள்ளிகளுடனும், குளிர்காலத்தில் புள்ளிகள் மறைந்தும், வெயில் காலத்தில் பிரெளன் நி'றத்திலும் காணப்படும்

5. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் அமெரிக்காவின் ஒருசில பகுதிகளில் இந்த மான்கள் வாழ்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 40-50 லட்சம் கருப்பு மான்கள் உயிர் வாழ்ந்த நிலையில் அதிகளவு உணவுக்காக வேட்டையாடப்பட்டதால் தற்போது மிக அரிதாக ஒருசில ஆயிரம் மான்கள் மட்டுமே உலகம் முழுவதும் உள்ளது.

6. மிக வேகமாக இந்த மான் அழிந்து வந்ததால் 1970ஆம் ஆண்டு இந்த மான் உணவுப்பொருளாக்குவது தடை செய்யப்பட்டது.

7. தமிழர்களாகிய நாம் பசுவை வணங்குவது போன்று ராஜஸ்தானில் உள்ள ஒருசில சமூகத்தினர் இந்த மானை தெய்வம் போல் வழிபடுவதும் உண்டு. எனவேதான் இந்த மானை கொன்ற சல்மான்கானுக்கு தண்டனை கிடைத்துள்ளது.

More News

பைக் விபத்தில் பலியான 16 வயது சிறுவன்: பெற்றோர் மீது வழக்கு

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்ட தடை என காவல்துறை எச்சரித்து வந்தும், சிறுவர்கள் பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

'காலா'வை குறிவைத்து காய் நகர்த்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

ஏப்ரல் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் உறுதியில்லை என்பதால் இந்த படத்தின் வியாபாரமும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் காலாவை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் காய் நகர்த்த தொடங்கிவிட்டன.

காமன்வெல்த் போட்டி: 2வது தங்கமங்கைக்கு சேவாக் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் மீராபாய் முதல் தங்கத்தையும், குருராஜா முதல் வெள்ளி பதக்கத்தையும் பெற்று தந்த நிலையில் இன்று இந்தியாவுக்க்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

மெர்க்குரி ரிலீஸ் குறித்து கார்த்திக் சுப்புராஜின் குழப்ப விளக்கம்

தமிழ்ப்பதிப்பு மட்டும் வெளிவராது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாகவும், வசனமே இல்லாத 'மெர்க்குரி' படத்திற்கு தமிழ் மொழி பதிப்பு என்ற ஒன்று உண்டா?

கோலிவுட் ஸ்டிரைக் எதிரொலி: ஆடு மேய்க்க போன பிரபல தமிழ் நடிகை

கோலிவுட் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் இருப்பதால் பெரிய நடிகர், நடிகைகள் முதல் சின்ன நடிகர், நடிகைகள் வரை வீட்டில் ஓய்வு எடுத்தும், வெளிநாட்டு, சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர்.