close
Choose your channels

அஜித் அவசர அவசரமாக சென்னை திரும்பியது இதற்காகத்தானா? வேகமாக பரவும் வதந்தி..!

Wednesday, July 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் ’விடாமுயற்’சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் நேற்று திடீரென சென்னை திரும்பினார் என்றும் அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை திரும்பினார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சர்ஜரி செய்யப்பட்டதாகவும் அதற்காகத்தான் அஜீத் அவசரமாக சென்னை திரும்பியுள்ளதாகவும் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.

அஜித் அஜர்பைஜான் செல்வதற்கு முன்பே ஷாலினிக்கு சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அவரிடம் கூறியதாகவும் இதன் பின்னர் சர்ஜரிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தான் அஜித் அஜர்பைஜான் சென்றதாகவும் அவ்வப்போது மருத்துவரிடம் தொடர்பு கொண்டு சர்ஜரி குறித்த விளக்கத்தை அஜித் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷாலினிக்கு தற்போது சர்ஜரி வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக அஜித் சென்னை திரும்பி உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் மீண்டும் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது தெரியவில்லை. அஜித் தரப்போ அல்லது அவரது மேனேஜர் தரப்போ இந்த தகவலை உறுதி செய்யவில்லை. இருப்பினும் இந்த தகவல் வதந்தி போல் மிக வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.