பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலேவில் கலந்து கொள்ளாதது ஏன்? ஆரியின் அதிர்ச்சி விளக்கம்!

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றே அதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட முக்கிய போட்டியாளர்கள் மற்றும் டைட்டில் வின்னர்கள் அதில் கலந்து கொண்டு உள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்து சுரேஷ் சக்கரவர்த்தியும் நக்கலுடன் ஒரு ட்வீட்டை பதிவு செய்து இருந்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆரி விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் விருப்பத்துடன் இருந்தேன். கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை’ என்ற அதிர்ச்சியான காரணத்தை ஆரி கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியை பிக்பாஸ் நிர்வாகம் ஏன் அழைக்கவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகளின் சுட்டித்தனத்தை ரசித்த நடிகை ஸ்ரேயா சரண்: க்யூட் வீடியோ வைரல்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தனது மகளின் சுட்டித்தனத்தை ரசிக்க்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த க்யூட் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிக்பாஸ் ஃபினாலே: ஐந்து பேரில் முதல் நபராக வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இன்றே நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பீஸ்ட்' ரிலீஸ் தேதியை உறுதி செய்த பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அந்த படத்தில் நடித்த பிரபல நடிகர்

'சூரரை போற்று', 'ஜெய்பீம்' படங்களை அடுத்து அமேசானுக்கு செல்கிறதா 'விருமன்'?

சூர்யா நடித்து தயாரித்த 'சூரரைப்போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் 'விருமன்' திரைப்படமும்

'ஆர்.ஆர்.ஆர்.', 'வலிமை'யை அடுத்து இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.', என்ற திரைப்படம் ஜனவரி 7ம் தேதியும், அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதியும் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணங்களால்