பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் யார்?

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான முக்கிய விதிகளில் ஒன்று ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் சனிக்கிழமை வெளியேறும் முதல் நபர் யார் என்பதற்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கன்பெக்சன் அறையில் வெளியேற்றும் இரண்டு நபர்களின் பெயர்களை கூறினர். இதன்படி எலிமினேட் பட்டியலில் உள்ள முதல் நபராக அனந்து தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்த போட்டிக்கு சரியான தேர்வு இல்லை என்று ஏற்கனவே பார்வையாளர்கள் கருத்து கூறியிருந்தனர் என்பதை பார்த்தோம். அதையே போட்டியாளர்களும் உறுதி செய்தனர். 

அனந்துவை அடுத்து எலிமினேட் பட்டியலில் இடம்பெற்றவர் மும்தாஜ். முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த காயத்ரியை ஞாபகப்படுத்தும் அளவுக்கு இவரிடம் கொஞ்சம் அதிகமாகவே நாட்டாண்மை தன்மை இருந்ததாக போட்டியாளர்கள் குற்றம் கூறினர். 

அதேபோல் இந்த பட்டியலில் இருந்த அடுத்த இரு நபர்கள் ரித்விகா மற்றும் நித்யா. ரித்விகா அமைதியாக யாருடனும் பேசாமல் இருப்பதாகவும், நித்யா வேலை எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் போட்டியாளர்கள் கூறினர்

எனினும் இந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் அனைவரும் முதல் நபராக வெளியேறுபவர் யாராக இருக்கும் என்ற பரபரப்பில் உள்ளனர்.

More News

பிக்பாஸ் 2: முதல் தலைவரான ஜனனி, ஏமாற்றத்தில் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவருடைய அறிவுரையின்படி போட்டியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி.

'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 62. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிடும் நோக்கத்தில் படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

பிக்பாஸ் 2ஐ அடுத்து கமல்ஹாசனின் திட்டம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ளதால் இதனையடுத்து கமல்ஹாசன்

அருள்நிதியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

நல்ல கதைகளை தேர்வு செய்து வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி.

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் முதல் தேசிய விருது பெற்ற கலைஞர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.